search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் பயிற்சி"

    • பருவாச்சி கிராமத்தில் கிராம வேளாண் விவசாயிகள் பயிற்சியானது நடைபெற்றது.
    • கால்நடை த்துறை அலுவலர்கள் அவர்களது துறை மானியத்திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.

    ஈரோடு:

    பவானி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் மூலம் 2023-24-ம் ஆண்டு கலை ஞர் திட்டம் செயல் படுத்த தேர்வு செய்யப்பட்ட பருவாச்சி கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்றக்குழு அமைக்கப்பட்டு அக்குழு உறுப்பினர்களுக்கு காரீப்பின் பருவ விவசாயிகள் பயிற்சியானது நடைபெற்றது.

    இப்பயிற்சியில் பவானி வேளாண்மை உதவி இய க்குநர் கனிமொழி தலைமை தாங்கி சிறப்புரை யாற்றினார். கோபி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சீனிவாசன் மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் எள் பயிர்களுக்கான உழவு, ரகத்தேர்வு, மண்பரிசோதனை மற்றும் உரமிடுதல் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.

    அங்கக விதை சான்று துறை மற்றும் விதை சான்று அலுவலர் தமிழரசு நிலக்க டலை, எள் மற்றும் மக்கா ச்சோளம் போன்ற பயிரில் விதை தேர்வு முறை, விதை ப்பண்ணை அமைத்தல், பூச்சி மற்றும் நோய் தாக்கு தல், மதிப்புக்கூட்டுத்தல் குறித்து ஆலோசணை கூறினார்.

    பவானி உதவி வேளா ண்மை அலுவலர் சித்தையன் கிராம வேளாண் முன்னேற்ற க்குழு அமைத்ததன் நோக்கம், அதன் பணி, அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தார். கால்நடை த்துறை அலுவலர்கள் அவர்களது துறை மானியத்திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் கங்கா உழவன் செயலி பதிவேற்றம், இ-நாம் மற்றும் இ-வாடகை குறித்து விவசாயிகளிடம் கூறினார். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மணிகண்டன், பூங்கோதை ஆகியோர் நன்றி கூறினர்.

    • கிட்டங்கி பராமரிப்பு குறித்த பயிற்சி காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • நவீன சேமிப்பு கிடங்குகளை பயன்படுத்தும் முறை, பயறு வகைகளை பராமரிக்கும் முறை குறித்து விளக்கி கூறினர்.

    காஞ்சிபுரம்:

    சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய மற்றும் சேமிப்பு கிடங்கு மேம்பாட்டு ஒழுங்கு முறை ஆணையம் நிதியுதவியுடன் கிட்டங்கி பராமரிப்பு குறித்த பயிற்சி காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் பா. ஜெயஸ்ரீ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளரும் செயலாட்சியருமான மு. முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளரும் முதன்மை வருவாய் அலுவலருமான சு. உமாபதி மற்றும் காஞ்சிபுரம் சரக துணைப்பதிவாளர் தே. சித்ரா ஆகியோர் வரவேற்று பேசினர். நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலைய இயக்குநர் சுரேஷ் கிட்டங்கி பராமரிக்கும் முறையை விளக்கி கூறினார்.

    இப்பயிற்சியில் நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலைய விரிவுரையாளர் நாகராஜன், மணியப்பன் (ஓய்வு) ஆகியோர் விவசாயிகளுக்கு சேமிப்பு கிட்டங்கி பயன்பாட்டு தானியங்கள் அறுவடை செய்த பிறகு அவர்கள் பராமரிக்கும் முறை, நவீன சேமிப்பு கிடங்குகளை பயன்படுத்தும் முறை, பயறு வகைகளை பராமரிக்கும் முறை குறித்து விளக்கி கூறினர்.

    காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு சார்பதிவாளரும் செயலாட்சியருமான சத்தியநாராயணன், காஞ்சிபுரம் சரக துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் அருணா, காஞ்சிபுரம் சரக கூட்டுறவு சார்பதிவாளர் கல்யாணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

    சங்கராபுரம் அருகே ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மாடுர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் இயங்கும் அட்மா திட்டம் மூலம் வயல் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. பயிற்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கள்ளக்குறிச்சி விஜயலட்சுமி தலைமை தாங்கி வேளாண்மை மானியங்கள் குறித்து எடுத்து கூறினார்.

    வேளாண்மை உதவி அலுவலர் பழனிச்சாமி விவசாயிகளை வரவேற்றார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சைமன் வயல் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்தும் மண்மாதிரி எடுத்தலின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேளாண்மை எதவி அலுவலர் அமிர்தலிங்கம் மேற்கொண்டார்.

    ×